Sunday 5th of May 2024 09:00:44 AM GMT

LANGUAGE - TAMIL
-
மட்டக்களப்பில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை!

மட்டக்களப்பில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை!


கொவிட் தடுப்பூசிகளை இதுவரையில் பெற்றுக்கொள்ளாத 30வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் கொவிட் தடுப்பூசிகளை வழங்கும் வகையிலான விசேட நடவடிக்கைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகள் ஊடாகவும் இந்த நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இதுவரையில் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு தடுப்பூசிகளை ஏற்றும் நடவடிக்கைகள் நான்கு பகுதிகளில் இன்று காலை முதல் முன்னெடுக்கப்படுகின்றன.

திசவீரசிங்கம் மாநகரசபை மண்டபம்,மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்ப கல்லூரி, சிவானந்தா தேசிய பாடசாலை, கொக்குவில் விக்னேஷ்வரா வித்தியாலயம் ஆகியவற்றில் இன்று தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.

இதுவரையில் தடுப்பூசிகளைப்பெற்றுக்கொள்ளாத 30வயதுக்கு மேற்பட்டவர்கள் இன்றும் நாளையும் நாளை மறுதினமும் தடுப்பூசி மையங்களில் தடுப்பூசிகளைப்பெற்றுக்கொள்ளுமாறு மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.கிரிசுதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்றைய தினம் திசவீரசிங்கம் மாநகரசபை மண்டபத்தில் இதுவரையில் தடுப்பூசிகளைப்பெற்றுக்கொள்ளாத 30வயதுக்கு மேற்பட்டவர்கள்,கர்ப்பிணிப்பெண்கள் தங்களது தடுப்பூசிகளைப்பெற்றுக்கொண்டதுடன் இரண்டாவது தடுப்பூசிகளைப்பெற்றுக்கொள்ளாதவர்களும் பெற்றுக்கொண்டனர்.


Category: உள்ளூர, புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE